Friday, November 25, 2011

மூடர்களாய் வாழ்கிறோமே??

"மிழனென்று சொல்லடா தலை நிமிரிந்து நில்லடா" என்று சொன்னான் புரட்சிக் கவி. ஆனால், ஒரு காரணத்திற்காக நான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். நம் மொழியையும் வரலாற்றையும் மறந்தமைக்காக. சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' திரைப்படம் நம் சிந்தனையை மற்றொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்கிறது.

இயக்குனர் திரு. முருகதாஸ் சில பல ஆழ்ந்த கருத்துக்களை முன்வைக்க முயல்கிறார். அவர் போதிதர்மன் என்னும் ஒரு தமிழனின் வரலாற்றையும் அவரின் கலைத்திறமைகளையும் சரியாகக் காட்டியுள்ளாரா என்பது சந்தேகமே. எனினும், போதிதர்மன் என்பவரைப்பற்றிய புரிதல் மக்களிடம் வந்துள்ளது. அவரைப்பற்றி சிறிதும் அறியாதவர்கள் தற்போது அவரின் பெருமைகளைப்பற்றி அறியமுயல்கிறார்கள். அவரைப்போல் இன்னும் எத்தனையோ தமிழர்களை நாமும் நம் சமுதாயமும் மறந்திருக்கிறோம். உதாரணத்திற்கு நம் சமூகவியல் (Sociology) பாடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நம் பண்டைத்தமிழ் இலக்கியவாதிகளான அகத்தியர், தொல்காப்பியர், வள்ளுவர் போன்றோர் கூறாத  சமூகவியல் சிந்தனைகளையா ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சிந்தனையாளர்கள் கூறிவிட்டனர்???

பல்லாயிரம் வருடங்களாக பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறோம் ஏன் எதற்கு என்று தெரியாமலே!! அதை "Super Brain Yoga" என்று Yale University School of Medicine உரிமை கோரியுள்ளது. அவர்களின் பலவருட ஆய்வின்படி தோப்புக்கரணம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறதாம். நம்  கோவில்களில் உள்ள நவகிரகங்களில் பெரியவர் வியாழன் (Jupiter) அல்லது குரு என்கிறோம். அதையேதான் அறிவியல் உலகம் நம் சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் (Planet) ஜுபிட்டர் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இத்தனை காலமாக நம்பப்பட்டு வந்த ன்பதாவது கிரகமான புளுட்டோ (Pluto) ஒரு குறுங்கோளாக (dwarf planet) வரையறுக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் liv-54, 60 என்ற மருந்தைத் தவிர இன்று வரை வேறு இல்லை. அம்மருந்தானது நம் மண்ணின் மூலிகையான கீழாநெல்லியில் இருந்து செய்யப்படுகிறது. நம் தமிழ் மருத்துவத்தில் பல நூறு  வருடங்களாக  கீழாநெல்லியை உணவாக பயன்படுத்திவருகிறோம். அம்மை நோயுற்றவர்களுக்கு வேப்பிலை அடிப்பது மாரிம்மன்னுக்காகவா?? குழந்தைகளுக்கு கடவுளின் பெயரில் மொட்டையடித்தல், நெற்றியில் விபூதி பூசிக்கொள்ளுதல், வீட்டு வாசலில் கோலமிடுதல்.... இதிலெல்லாம் நம் கற்பனைக்கு எட்டாத பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.

 உலகின் மிகத்தொன்மையான வாழும் மொழிகள் என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுவது தமிழும், சீன மொழியும்தான். அனால், சீன மொழி என்று ஒரு மொழி ண்மையில் இல்லை. அது மாண்டரின் (Mandrin) என்கிற பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழியோடு ஏத்தாழ  ஐந்து ஆறு சிறு சிறு வட்டார மொழிகளையும் குறிக்கின்றது. எனவே, உலகின் மிகத்தொன்மையான வாழும் மொழி என்றால் அது தமிழாகத்தான் இருக்கமுடியும். அனால், இக்கருத்தை நம்முள் பலரே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்! கண்டுகொள்ள மாட்டார்கள்!

இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இப்படி மூடர்களாய் வாழப்போகிறோம்?? நம்மைப்பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ளாமல், நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு??? நம் தலைமுறையிர் முதலில் நமது மொழியையும் நமது போற்றத்தக்க கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கற்க வேண்டும். அவற்றை அறிவியல் நோக்கில் கற்க வேண்டும். எந்த ஒரு நாடும் மக்களும் அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் விட்டொழித்து முன்னேற முடியாது. அதை நாம் சீனர்களின் வெற்றிச்சரித்தித்தில் காணலாம். இத்தருணத்தில் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்!